Thursday, October 22, 2009

கிருஷ்ணா என்கிற கதாபாத்திரம் , எண்ணங்கள் சில ....

என்னடா எழுதுவது என்று கொஞ்சம் யோசித்தபோது தோன்றியது இது.

என்னை பல நேரங்களில் சிலிர்க்க, சில நேரம் சிரிக்க வைத்த ஒரு பாத்திரம்.

அநியாயத்துக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் படைப்பு.

எந்த காலத்திலும் எதோ ஒரு கிருஷ்ணரின் இயல்பு அக்காலத்துக்கு எற்றுக்கொள்ளமுடியாதபடி இருந்திருக்கும்.

தானே தன் அடுத்த நடிவடிக்கையை தேர்ந்தெடுக்க முடிந்த ஒரே ஆள் , நம்ம ஆள்தான் :).

முடிவெடுத்துட்டா எடுத்ததுதான் !



ஒரு ஹீரோவாக பார்த்தால்  , யாரும் பக்கத்தில் கூட வர முடியாதது...


காதல் , நகைச்சுவை , தொடை தட்டி படை முடிக்கும் திறன் , தத்துவம் , பஞ்ச் லைன்கள் என இப்போதுள்ள மசாலா பட ஹீரோவின் அத்தனை அம்சங்களும் அடங்கியவர் - அப்போதே !


***************************************************************************************
நினைத்து பார்க்கிறேன் , சுவாமிக்கு முற்றுமாக அலங்காரம் செய்து பின்னர் திரையை சடாரென்று விலக்கி , தீப ஆராதனை செய்வதும் , அதை கண்டு நம் மக்கள்  பரவசம் கொள்வதும் ....

அந்த காலத்தில் கடவுளை மட்டுமே எந்த சமுதாய மாற்றத்திற்கும் நம்பிய நம் மக்கள் மனதில் - ஒரு Action Hero Image இவருக்கும் இருந்திருக்கக்கூடும்.

*****************************************************************************************
இந்த கிருஷ்ணா என்கிற Charecter  எனக்கு பிடிக்க ஆரம்பித்தது ஓஷோவின் புத்தகத்தை படித்த பின்னரே ...
எனவே வருங்காலத்தில் நான் பகவத் கீதையை படித்தாலும் , பக்தி எனக்கு உருவானாலும் , அதில் ஓஷோவின் பங்கு  பெரியதாக இருக்கும்.
Eventhough it travels in a completely different path from OSHO.

கர்ணனின் கதை என்ற பாலகுமாரனின் நாவலில் வரும் ஒரு பகுதி , கிருஷ்ணனின் லீலைகள் ஏன் என கர்ணன் த்யான நிலையில் யோசிப்பதாய் வரும் ... அருமையாக இருக்கும் .

அவரே எழுதிய மற்றுமொரு கதையில் , சுபத்திரையை திருமணம் செய்ய நினைக்கும் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் வாதிடும் இடங்களும் அருமையாக ஹாஸ்யத்துடன் இருக்கும்.
******************************************************************************
எனக்கும் பலரை போல கடவுளை பற்றிய குழப்பங்கள்  உண்டு ,
ஆன்மீகத்தில் உள்ள அளவுக்கு ஏனோ பக்தியில் இன்னும் ஈடுபாடு இல்லை .
பூஜை செய்வது கூட இல்லை ,  

து எவ்வாகிலும் அதுவொன்றே உள் உள்ளமை
புரிந்தரியா அறிவுவெறும் பாட !

என்ற குரளுக்கேற்ப (தமிழ் அன்பர்கள் மன்னிக்க :) )
என் நண்பர் 'வினோத்' மெல்லிய பின்னணி இசை சேர்த்து நான் பாடிய (எனக்கே பிடித்துப்போன ) நான்கு வரிகள் ...
நீங்களும் கேட்டு பார்த்து பின்னூட்டம் போடவும்




Tuesday, October 13, 2009

இந்த வார ....... காமெடியும் / கடுப்பும் :) / :(

  வாழ்க்கையில்  பல  நேரங்களில்  , நாம்  நமக்குள்  நடக்கும் காமெடியை  கவனிக்காமல்  விட்டுவிடுவோம்  ....
நானும்  என்  மனைவியும் கூட  , எல்லோரையும்  போல  , சண்டையும்  சகலமும்  கலந்து கட்டி முட்டி உடையும் ஜோடிதான் என்பதால் ...

இதையே பதிவாக போடலாமே என்று ஒரு சின்ன ஐடியா ...
நல்லா இருக்கில்ல ?

So , Coming to the Matter

இந்த வார ....... காமெடி!
*************************
நாள்  : Monday 12th oct
சமயம்  : Vijay டிவியில்  , உலக  நாயகன் 50 பார்க்கையில்


SPB அவர்கள் மேடை ஏறினார் .
எதிரே உள்ள மேடையில்   கமல் , ரஜினி , இளையராஜா  மூவரும் ....

பாடலை பாடும் வகையில்  எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .... UNPLUGGED எனப்படும் ..
இயற்கையாய் ,... தாள முக்கியத்துவம் குறைந்து ,.. PIANOவோடு பாடகர் குழைந்து , ஒவ்வொரு நுன்னோடிகளையும் ரசித்து பாடுவது ...

பாடுபவரின் கற்பனையும் , இப்படி பாடி இருக்கலாமோ என்று அவர்கள் பிறகு எண்ணியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் ...
பியானோவில் வரும் வித்தியாசமான Running Chords வேறொரு தளத்தில் சில நேரங்களில் நின்று .... இதுவரை கேட்டிராத ஒரு புது உணர்வும்/உருவமும்/பாலும்/பழமும் ..... என்னமோ பண்ணும் சார்.

இப்படியாக நான் கிரங்கிக்கொண்டிருக்கையில் , வந்தது இரண்டாவது பாடல் ...
தெலுங்கில் "மௌனமான நேரம்" என்று ; ஆஹா ... பாடிப்பார்த்தால் அழகு நம் குரலில் தானாக சேரும்.
எதிரே ஒரு மன்னன் (ராஜா) .. இப்படி பல பொக்கிஷங்களை உருவாக்கி விட்டு
என் நண்பன் பரணி எழுதிய கவிதையில் வரும் ... "இது நான் 'எய்துவிட்ட' அம்பாகையால் - எனக்கு இனியும் சொந்தமில்லை"  என்பது போல ...
இவன் இதை எப்படி பாடுகிறான் ( SPB யை ராஜா அப்படித்தான் நினைத்திருப்பார் ) என்பதை மட்டும் கவனித்துகொண்டிருந்தாரோ ?

அப்போது நீங்கள் ரஜினியின் முகத்தை பார்த்திருக்க வேண்டும் ... எங்கே போனது இம்மெல்லிய தமிழ்த்திரையிசை என்பது போன்ற உணர்வை தேக்கி வைத்து ... அவ்வுணர்வு அவருக்கே புதுவுலகை தந்தது போல ... அதை மாற்ற நினையாமல் அப்படியே விட்டுவிட்டார் ....
இளையராஜாவின் பாடல்களில் பல உருப்படாதவையாயினும் , சீக்கிரமே இன்னொரு நல்ல பாடல் FM வழியேனும்  வந்து  நம் மனதில் உள்ள அவரின் நிரந்தர அரியாசனையை முட்டு கொடுத்து நிறுத்தி வைத்துவிடுகிறது.

கரைந்துகொண்டிருந்த என் இதயத்தின் ரசாயன மாற்றம் தாள முடியாமல் தவித்துகொண்டிருக்கையில் ..

என் மனைவி கேட்டாள் ...

SPB க்கு யார் Coat Stich பண்றாங்கன்னு தெரிஞ்சா நல்லதுpa ... நல்லா இருக்கு இல்ல ? என்றாள் - ( சற்றே குண்டான என் உடலாலோ என்னவோ ) ...

அர்ர்ர்ர்க்க்க்க் , கையை கடித்துகொள்ளலாமா என்றாகிவிட்டது  .... அவளும் சிரித்துவிட்டாள்
 
இதைதான் அப்போதே ஓஷோ ஒரு வரியில் சொன்னார் -  A ROSE is A ROSE is A ROSE.


இந்த வார ....... கடுப்பு !
*************************

நீங்க இப்போ ஏத்தாதீங்க ..... :(

மேல உள்ள எல்லாத்தையும் படிச்சுட்டு , நான் இன்னும் வேற - ஒரே வாரத்துல அனுபவிக்கனும் போல ...

அடுத்த  வாரம் பாக்கலாம்

 - நா வாரேன்

Sunday, October 11, 2009

நம்பிக்கையல்ல ....... நிஜம் !!

இருவேறு பரிசுகளை , வேறு வேறு நேரங்களில் தந்தாய்.
ஒன்று - நீ எனக்குள் விதைத்தது (அல்ல - விதைந்தது )
இரண்டு - நீ எனக்காய் அளித்த செல்ல நாய் பொம்மை

இரண்டுக்குமே  உயிருண்டு , வெறும் நம்பிக்கையல்ல ....... நிஜம் !!


வெளியே வந்தால் இரண்டுமே அழுக்காகிவிடும் என்பதால்
முன்னதை நினைவுகளாலும் ,
பின்னதை பிளாஸ்டிக் பையிலும் ....... கட்டியே வைத்தேன் .


இப்போது உயிருள்ளது என்றாலும் , இரண்டுமே என்றேனும் மூச்சு முட்டி இறந்துவிடுமோ என்ற பயம் ....

காற்று உட்செல்லும் அளவுக்கு , பின்னதற்கு பிளாஸ்டிக் பையின் வாயை லேசாக திறந்து விட்டேன் ...

உள்ளே உள்ள மற்றது  உதடு துடித்துக்கொண்டு கேட்டது ..... நானு ? !!!!

கொஞ்ச ஆரம்பித்தேன் ,
ஏண்டா கண்ணா , உனக்காகத்தானே இவ்வளவும் எழுதினேன் என்று !!!

 - சொல்லா (சொல்ல முடியா) காதலின் தவிப்பு

                    
                                            

Friday, October 9, 2009

ஒரு கமல் ரசிகனின் ... ஞாயமான ஆசை


உன்னைப்போல் ஒருவன் பார்த்தபின் ஏற்பட்டது இந்த உணர்வு  ........
இக்காலத்தில் கமலுக்கு பல தேவை இல்லாத சுமைகள்;

ஒவ்வொரு படத்திலும் வித்தியாச விரும்பி என்று நிரூபித்தாக வேண்டும்
உலக நாயகன் என்ற தேவை இல்லாத பட்டம் (இதுக்கு அர்த்தம்தான் என்னங்க ... ? )

அப்போல்லாம் கமல் படம் நல்லா இருந்துது என்கிற Nostalgic Feeling இல்லை இந்த பதிவு .
ஆனால் இப்போது தேவை இல்லாத பாரங்களை சுமந்து கொண்டு ; நானே ராஜா நானே மந்திரி என்று எல்லாவற்றையும் என் செய்ய வேண்டும்.

உண்மையில் Common man தோற்றமும் சரி , Nassiruddin Shah வின் இயல்பான நடிப்பும் சரி ,

அன்யாயதுக்கு உன்னை போல் ஒருவனில் மிஸ்ஸிங்.

சண்டை போட வருபவர்கள் ... இதை பார்த்துவிட்டு  மனசாட்சியுடன் பேசவும் ...


என் ஆதங்கம் தவறா ?


Chakri உ.போ.ஒ னில் எந்த அளவுக்கு இயக்குனராக இருந்திருப்பார் என்பது சொல்ல தேவை இல்லை .
இருந்தாலும் இன்னொருவர் படைப்பில் நடிகனாக மட்டும் இருத்தல் கமலின் திறமைக்கும் அனுபவத்துக்கும் அவ்வளவு என்ன கேவலத்தை கொடுக்க போகிறதோ ?!.

கமலின் நடிப்பு திறன் உபயோகப்படுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகிறதோ என தோன்றுகிறது .

கமலே ஒரு பேட்டியில் சொன்னது போல ... ( சில காலம் மைக்கை மட்டும் பிடித்துகொண்டிருந்த போது மோகன் வந்து காப்பாற்றினார் , நடனம் நானே என்ற போது
பலர் வந்து காப்பாற்றினர் , .... இப்படி போனது )
இப்போதிருக்கும் சூழ்நிலையிலும் கமலே எல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை , நல்ல இயக்குனர்களுக்கு நடிப்பின் நுட்பத்தை இயல்பாக வெளிப்படுத்தும் நடிகர்கள் தேவைபடுகிறார்கள் , அவர்களின் கனவை நனவாக்க உதவுவது உத்தமம்.


இந்த விஷயத்தில் நான் சாரு நிவேதிதாவின் கட்சி .....

கமலிடம் உள்ள சுமைகளை குறைத்து அவரை ப்ரீயாக முதன்மையான பாத்திரத்தில் மட்டுமே இல்லாமல் பார்க்க துடிக்கும் Common Man நான்..
இதை இந்தியாவின் மிகப்பெரும் நடிகர்கள் பலர் வழிமோழியும்படி வாழ்கையே வாழ்துகொண்டிருக்கும்பது போது .... நம் கமலுக்கு என் இன்னும் வீராப்பு .

நாந்தான் எல்லாவற்றையும் முதலில் செய்திருக்க வேண்டும் என்ற என்னமா ...?
அவர் சொல்லும் முதல்களில் எத்தனை உண்மை என்பதே சந்தேகமாக உள்ளது .... இப்போதெல்லாம் தேவை இல்லாத விளம்பரங்கள் வேறு ....

இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்ற நிலையை எந்த நடிகரின் படம் முன்கூட்டியே தந்தாலும் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை ,
கமலை பிடித்ததன் காரணமும் அதுவே , பல நடிகர்களை பிடிக்காததன் காரணமும் அதுவே ( பத்து வருடங்களாக ) ... ஏனோ இப்போது ஒரு சலிப்பு தோன்றுகிறது ....

போதும் கமல் ... உங்கள் தோள்களில் உள்ள சுமையை (குறைந்த பட்சம் தேவை இல்லாததை மட்டுமாவது ) .. இறக்கி வைத்து . சிலரிடம் ஹாயாக உங்களை ஒப்படைதுதான் பாருங்களேன் .... நடிப்பு , திரைக்கதை , பாடல் ... எதிலும் ... உங்கள் விருப்பம். இது நீங்கள் ஏற்கனவே செய்ததே .....

People would understand how much you are open - Only when you say that your time is available ... SINCE IT SEEMS YOU ARE BIG for them.

கமல் நடிக்கும் படமே என்றாலும் சினிமா என்றல் ஒரு "கூட்டு தயாரிப்பு " என்ற சொல்லிலிருந்து மீள முடியாது .

கனவுள்ள இயக்குனர்கள் உள்ளனர் . Too much of influence will not make sence in cinema ...
இது ஒரு வியாபாரமோ தொழிற்சாலையோ போன்றதல்லவா ... ?
எல்லாவற்றையும் உங்கள் விருப்பபடியே வார்ப்பது கடினம் , என்னை கேட்டால் தேவையற்றதும் கூட .

பிறகு உங்கள் சினிமா ஒரு சுயதொழிலாகவே அமையும் , தாங்கள் சொல்லிக்கொள்வது போல கூட்டு முயற்சியாக இராது .

It needs a lot of Delegation and Trust towards people.

படங்களில் வித்யாசம் இருக்க பாடுபடும் நீங்கள் , உங்கள் பார்வையிலும் ... ஏன் பாதையிலும் வித்யாசம் காட்டி கருணை வைத்தால் ... உங்களை கொண்டு படைப்புகள் பல தர என்னை பொறுத்த வரை இயக்குனர்கள் என்னமோ தயாரே.

இது நடந்தால் , ஐந்து வருடத்துக்குள் , பல அருமையான படைப்புகளில் உங்கள் பங்கு இருக்கும் என்பது எனக்கு தெரியும் .....

இதை செய்யாமல் விட்டுகொண்டிருந்தால் ... நஷ்டம் சினிமாவுக்கோ , பார்வையாளர்களுக்கோ அல்ல ...

Men may come ... Men may go ....

Common Cinema Fan ..... (Not only kamal's)

Thursday, October 8, 2009

சமீபகாலமாய் எனை ஆட்கொண்டிருக்கும் சங்கீதம் !!



என் மகள்

வாழ்க்கையில் பொறுப்பு என்பதை அலுவலக வேலையிலும் கூட எனக்கு சொல்லி தந்தவள் பெற்றெடுத்த தங்கம் .

குழந்தைகளுக்கு பொதுவாகவே - பார்த்து இவர்தான் என யாரையும் தெரிந்துகொள்ள , நாம் வந்த உடன் முகத்தை பார்க்க கூட சில வாரங்கள் ஆகிவிடும்.

ஆனால் இவளோ , பிறந்த அன்று மாலையே  லிப்டில் செல்லும்போது வந்த இசையில் லயித்து புன்னகைத்தவள். பிறந்த குழந்தையும் மயங்குகிறது .

ஆச்சர்யம் என்னவென்றால் , ஒரே பாடலை நானும் என் மாமனாரும் திரும்பி திரும்பி பாடியே அவளை பல நாள் தூங்க வைக்க வேண்டி இருந்தது. குழந்தைக்கும் விருப்பங்கள் பிறக்கும்போதே உருவாகி விடுகிறதோ ?

ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தபடி ஒரு நன்னாளில் பெயர் சூட்டினோம் - "சஹானா"

கார்க்கி கொடுத்த உத்வேகத்தில் .... :)

அவசர அவசரமா , எப்டி Blogging போடுவதென்று பார்த்து ,

நாங்களும் வந்துடோம்ல ... :)

பதிவர்களுக்கு வணக்கம் சீக்கிமே , பல விஷயங்கள் ஷேர் பண்ண போறோம் ..

பாக்கலாம்