Thursday, October 8, 2009

சமீபகாலமாய் எனை ஆட்கொண்டிருக்கும் சங்கீதம் !!



என் மகள்

வாழ்க்கையில் பொறுப்பு என்பதை அலுவலக வேலையிலும் கூட எனக்கு சொல்லி தந்தவள் பெற்றெடுத்த தங்கம் .

குழந்தைகளுக்கு பொதுவாகவே - பார்த்து இவர்தான் என யாரையும் தெரிந்துகொள்ள , நாம் வந்த உடன் முகத்தை பார்க்க கூட சில வாரங்கள் ஆகிவிடும்.

ஆனால் இவளோ , பிறந்த அன்று மாலையே  லிப்டில் செல்லும்போது வந்த இசையில் லயித்து புன்னகைத்தவள். பிறந்த குழந்தையும் மயங்குகிறது .

ஆச்சர்யம் என்னவென்றால் , ஒரே பாடலை நானும் என் மாமனாரும் திரும்பி திரும்பி பாடியே அவளை பல நாள் தூங்க வைக்க வேண்டி இருந்தது. குழந்தைக்கும் விருப்பங்கள் பிறக்கும்போதே உருவாகி விடுகிறதோ ?

ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தபடி ஒரு நன்னாளில் பெயர் சூட்டினோம் - "சஹானா"

2 உங்க மனசுல பட்டது:

said...

"Sahana" ! azhagana peyar ! azhagana ragam !

said...

நன்றி திரு.பாலாஜி அவர்களே

என் தந்தைக்கும் மிகவும் பிடித்த ராகங்களில் ஒன்று ... (கேள்வி ஞானம் மட்டுமே ).
ஆனாலும் , உன்னிகிருஷ்ணன் பாடிய "வந்தனமு ரகுநந்தனா ... " வுக்கு பிறகு ... அவரின் favourite ஆகிப்போனது ....

சில பெயர்களை உச்சரிக்கும்போதே சங்கீதம் ஒட்டிக்கொளும் , அப்படி ஒன்று இது ... என் இருபதாவது வயதில் எடுத்த முடிவு ... :)

அவளும் responsive to quality music ...

தங்கள் வருகைக்கு நன்றி ... Ariv

ஆசிர்வாதங்களும் வேண்டி Sahaana :)